இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 27 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) மாலை 5.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 4 படகு, செல்போன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் அனைவரையும், சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply