இலங்கையில் கடல் மார்க்கமாக தங்கம் கடத்திய 2 பேர் கைது! -5.7 கிலோ தங்கம் பறிமுதல்.

கிளிநொச்சியில் இருந்து உட்சம்வாய் கடல் பகுதி வழியாக 5.7 கிலோ தங்கம் கடத்திய இரண்டு நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.7 கிலோ தங்கம் மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தங்கம் கடத்திய இரண்டு நபர்களும் கல்பிட்டியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply