இலங்கை கடற்பரப்பில் 07 இந்திய மீனவர்கள் கைது!  

இலங்கை, காங்கேசன்துறை கலங்கரை விளக்கத்திலிருந்து 10.5 கடல் மைல் தூரத்தில், மீன் பிடித்துக்கொண்டிருந்த 07 இந்திய மீனவர்களை (23 ஜூலை 2018). இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply