இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக இடம் பெயர்ந்த தந்தை மகன் கைது!

இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தலைமன்னார் மணல் மேடு மறைவிடத்தில் சட்ட விரோதமாக குடியேறியிருந்த 28 வயதுடைய ஒரு ஆண் மற்றும் 4 வயதுடைய ஒரு  குழந்தை ஆகியோரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக குடியேறி உள்ளார்கள் என்பதும், ஆனால், இவர்களின் பூர்வீகம் கிளிநொச்சி என்றும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரையும் சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply