கடல் மார்க்கமாக கஞ்சா கடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 இந்தியர்கள் இலங்கை கடற்பகுதியில் கைது! 

இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்பகுதியில் அனலைத் தீவு அருகே (ஜூலை 16) இந்தியாவில் இருந்து, இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 இந்தியர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 36.1 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் பயணம் செய்த படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சட்ட நடவடிக்கைக்காக அவர்களை காங்கேசன்துறை காவல் நிவையத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் நால்வரும் தமிழ்நாடு மாநிலம், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply