கொழும்பு வியாபார நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

கொழும்பு புறக்கோட்டை 1-வது குறுக்குத் தெருவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றில், இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் நீர் பாயும் இயந்திரங்களோடு விரைந்து சென்ற இலங்கை கடற்படை தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரங்கள் கடுமையாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இத்தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகி சாம்பலாகின.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply