கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவருக்கு கடுமையான காய்ச்சல்!-காப்பாற்றி கரைச்சேர்த்த இலங்கை கடற்படையினர்.

இலங்கை மேற்கு மாகாணம், களுத்துறை மாவட்டம், தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள உல்லாச நகரம் என்று அழைக்கப்படும். வேர்விலை என்கின்ற பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூன் 14 -ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவருக்கு கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டதின் காரணமாக நோய்வாய்ப்பட்டார்.

இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சகத்தால் நேற்று அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலங்கை கடலோர காவல் படையினர், கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட அந்த மீனவரை, இலங்கை கடலோர காவல்படை கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு ஹம்பாந்தோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN June 28, 2018 4:55 pm

Leave a Reply