கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டுள்ள இரண்டு பிரெஞ்சு கடற்படை கப்பல்கள்!

பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான Dixmude and Surcouf- என்ற இரண்டு போர் கப்பல்கள், இன்று (18.06.2018) கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தன. கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படை வீரர்கள், பிரெஞ்சு கப்பல்களில் வருகை தந்தவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த ஒரு நாள் பயணத்தின் போது, இலங்கைக் கடற்படை ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்வுகளில் பிரெஞ்சு கடற்படை குழுவினர் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply