இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 5 புலம்பெயர்ந்த தமிழர்களை கடல் மார்க்கமாக அழைத்து வந்த 2 கடத்தல்காரர்கள் உள்பட 7 பேர் கைது!

இலங்கை வடக்கு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காங்கேசன்துறைக்கு வடக்கே 11 கடல் மைல் தூரத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு படகை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

அந்த படகில் 4 ஆண்கள், 2 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 7 பேர் இருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், படகில் இருந்தவர்களில் 2 ஆண்கள் இந்தியாவிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தல் தொழிலில் ஈடுப்படுபவர்கள் என்றும், அந்த வகையில் மேற்காணும் 2 பெண்கள், 2 ஆண்கள், ஒரு சிறுவன் உள்பட 5 புலம்பெயர்ந்த தமிழர்களை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக சட்ட விரோதமான முறையில் படகில் அழைத்து வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 7 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply