இலங்கையில் கடும் வெள்ளப் பெருக்கு! 3 மாத கை குழந்தையுடன் வெள்ளத்தில் சிக்கி தவித்த ஒரு தாயையும், ஒரு கர்ப்பிணி பெண்ணையும் காப்பாற்றிய இலங்கை கடற்படையினர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, நாடு முழுவதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் இலங்கை கடற்படை மும்முரமாக ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாத்துலூயா பாலம் மற்றும் சிலோவிலுள்ள புரிச்சிக்குளம் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இங்கு இரவு நேரத்தில் 3 மாத கை குழந்தையுடன் வெள்ளத்தில் சிக்கி தவித்த ஒரு தாயையும், ஒரு கர்ப்பிணி பெண்ணையும் மற்றும் குழந்தைகளையும் இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக  கரைச்சேர்த்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply