மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமம் ! – 36 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற மலரும் நினைவுகள்…!

திருச்சி மாவட்டம், துப்பாக்கித்தொழிற்சாலையில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 36 ஆண்டுகளுக்கு முன்பு 10ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமம் துப்பாக்கி தொழிற்சாலை மக்கள் மன்றத்தில் நடந்தது.

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கித்தொழிற்சாலை வளாகத்தில்  உள்ள உயர்நிலைப்பள்ளியில் 1981 மற்றும் 1982 ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் மற்றும் அவர்களுக்கு பாடம் நடத்திய பள்ளி ஆசரியர்களின் சங்கமம் துப்பாக்கித் தொழிற்சாலை மக்கள் மன்றத்தில் நடந்தது

36 ஆண்டுகளக்கு முன்பு 10ம் வகுப்பு படித்தவர்கள் இன்று வயதானவர்களாக இருப்பதோடு அவர்கள் பல்வேறு அரசுதுறை, சுயதொழில் மற்றும் வெளிநாடுகளில் வேலைபார்த்தவர்கள் ஒன்று கூடி தங்களது பள்ளி நாட்களில் நடந்த மறக்கமுடியாத அனுபவங்களையும் நிகழ்வுகளை அனைவர் மத்தியிலும் நினைவு கூர்ந்ததோடு தங்கள் தற்போது என்னசெய்கிறோம், எப்படி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்று என்பதையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர்

மேலும் அப்போது அவர்களுக்கு பாடம் எடுத்த ஆசியரியர்களான இளங்கோவன், முருகேசன், கோவிந்தராஜ், டேவிட், பத்மலதா, ராஜாம்பாள், தேவராஜ் ஆகிய ஆசிரியர்களும் தங்களது வாழ்நாளில் தங்களிடம் 36 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகள் தங்களை மறக்காமல் அழைத்து அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் சந்திக்க செய்தது எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறினார்கள்

இந்த விழாவில் மாணவ மாணவிகளையும் ஆசிரியர்களை சங்கமித்த  விழாவிற்கு ஒருங்கிணைப்பாளராக இளங்கோவன் செயல்பட்டார்

-ஆர்.சிராஜுதீன்.

Leave a Reply