ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் இரண்டு முன்னோடி திட்டங்களை செயல்படுத்த மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் அதுல் குமார் திவாரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் இரண்டு முன்னோடி  திட்டங்களை செயல்படுத்த மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில் மஹிந்திரா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அனிஷ் ஷா மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பயிர் உரமிடுதல், பயிர் வளர்ச்சியைக் கண்காணித்தல், விதைகளை நடவு செய்தல் போன்ற விவசாயப் பணிகளுக்காக ட்ரோன்களை இயக்க 15,000 பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, புதிய தொழில்நுட்பப் பகுதிகளில் திறன்களை வழங்குவதன் மூலம் பெண்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகள் உருவாகின்றன.

நிகழ்ச்சியில் பேசிய திரு திவாரி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் வேளாண் நிபுணத்துவம் விரிவான பயிற்சியின் மூலம் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை விவரித்தார். விவசாயத்தில் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முன்னோடி திட்டங்களுக்காக ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இரண்டு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒத்துழைப்பு, குறிப்பாக வளர்ந்து வரும் வர்த்தகங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ட்ரோன் சகோதரி திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவது, தேச நிர்மாணத்திற்காக பெண்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்று திரு திவாரி மேலும் கூறினார். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான திறன்களுடன் பெண்களைத் தயார்படுத்துவதற்கான அமைச்சகத்தின் தொலைநோக்கை இந்த ஒத்துழைப்பு முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டணியின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் தலா 20 பெண்கள் கொண்ட சிறப்பு குழுக்களில் 500 பெண்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் இரண்டு முன்னோடித் திட்டங்களை நடத்தும். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்த 15 நாள் பாடத்திட்டம், இந்த மையங்களில் தொலைதூர பைலட் பயிற்சி அமைப்பு பயிற்றுவிப்பாளர்கள் மூலம் வழங்கப்படும்

திவாஹர்

Leave a Reply