கண்களில் காயம் ஏற்பட்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவரை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை ஃபவுல் பாயின்ட் பகுதியில் இருந்து  225 கடல் மைல்கள் தூரத்தில், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனவருக்கு, கண்களில் காயம் ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை கடற்படையினர், அங்கிருந்து மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திரிகோணமலை பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கண்களில் காயமடைந்த நபர், கடந்த 7- ம் தேதி மீன் பிடிப்பதற்காக காலி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் வந்த நபர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply