திருச்சியில் முழுமையாக திறக்கபடாத மேம்பாலத்தில் அடிக்கடி நிகழும் விபத்துகள்…!

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஆபத்தான வளைவு உள்ளது. இதில் இன்று (07.03.2018) மதியம் 3 மணியளவில் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக போட்டிப் போட்டுக் கொண்டு வேகமாக சென்றதில், கார்கள் கட்டுபாட்டை இழந்து மோதிக்கொண்டது.

இந்த மேம்பாலம் ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை யாரும் பின்பற்றுவதில்லை. இதை கண்காணிக்க வேண்டிய மாநகர போக்குவரத்து காவலர்கள் இதை கண்டுக்கொள்வதும் இல்லை.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால், இந்த மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக மேம்பாலத்தின் மையத்தில் கீழே இருக்கும் அம்பேத்கார் சிலைக்கு சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

-ச.ராஜா.

-ரா.ரிச்சி ரோஸ்வா.

Leave a Reply