கடலில் காயமடைந்த மீனவரை காப்பாற்றி கரைச்சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை கடற்படைக்கு வந்த அவசரத் தகவலின் அடிப்படையில்காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தூரத்தில், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவருக்கு காயம் ஏற்பட்டு துடித்துக்கொண்டிருந்தார் என்பது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  இலங்கை கடற்படையினர், அவரை அங்கிருந்து மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து, காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்து கரைச்சேர்த்தனர். அதன் பிறகு கராபிட்டிய பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply