இலங்கை வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா  பிப்ரவரி 26, தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க,  அட்மிரல் ஜயந்த த சில்வாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன் பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும்  அட்மிரல் ஜயந்த த சில்வாவை, மற்ற அதிகாரிகள் கடற்படை தலைமையகத்தின் நுழைவாய் வரை அழைத்துச் சென்று அவருக்கு பிரியாவிடை அளித்தனர். அவ்வேளையில், பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

1984-ம் ஆண்டில் 12-வது ஆட்சேர்ப்பின் அதிகாரியாக கடற்படையில் இணைந்த இவர், தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு துறைகளில் இலங்கை கடற்படை நலனுக்காக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply