இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!- 7 கிலோ  தங்கம் பறிமுதல்.

இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இலங்கை கந்தகுளியா, கல்பிட்டி கடற்கரை பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக 7 கிலோ  தங்கம் கடத்த முயன்ற இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 7 கிலோ தங்கம் (100 கிராம் எடையுள்ள 70 பிஸ்கட் வடிவில்) பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட 7 கிலோ தங்க  பிஸ்கட்டுகளை, இலங்கை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். 

 –என்.வசந்த ராகவன்.

Leave a Reply