இலங்கை சிறையிலிருந்து மூன்று இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் அதாவது ஜனவரி -16 அன்று கைது செய்தனர்.

இந்திய அரசு அவசர நிமித்தமாக கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், அதில் மூன்று இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம்  விடுவித்துள்ளது. துக்கக்காரியத்தில் கலந்து கொள்வதற்காக இவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

விடுவிக்கப்பட்ட மூன்று இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படை உதவியுடன், இந்திய கடலோர காவல்படையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply