இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!- 3.7 கி.கி. தங்கம் தங்கம் பறிமுதல்!

இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வடகிழக்கு பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக 3.7 கி.கி.  தங்கம் கடத்த முயன்ற இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (06 பிப்ரவரி) மாலை 6 மணியளவில் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 3.7 கி.கி. தங்கம் (100 கிராம் எடையுள்ள 37 பிஸ்கட் வடிவில்) பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட 3.7 கி.கி. தங்க பிஸ்கட்டுகளை, இலங்கை சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 –என்.வசந்த ராகவன்.

Leave a Reply