இலங்கையில் கடல் சங்கு மற்றும் கடற்பாசி வைத்திருந்த நபர் கைது!

இலங்கை, கல்பிட்டி அனவாசா கடற்கரையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 775 கடல் சங்கு மற்றும் 10 கிலோ கடற்பாசி வைத்திருந்த நபர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு படகு மற்றும் மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடல் சங்கு மற்றும் கடற்பாசி ஆகியவை அரிதான உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதை பிடிப்பதோ, விற்பனை செய்வதோ, காட்சிப்படுத்துவதோ மற்றும் ஏற்றுமதி செய்வதோ மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.

 

 

Leave a Reply