கடலில் மூழ்கிய நபரை காப்பாற்றிய இலங்கை கடற்படையினர்!

இலங்கை திருகோணமலையில் உள்ள சிட்கே ஹார்பரிலிருந்து 8.5 கடல் மைல் தொலைவில், மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

சிறிலங்கா காவல்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை கடற்படையினர், பாதிக்கப்பட்ட நபர் பாதுகாப்பாக கடற்படை கப்பலுக்கு மாற்றப்பட்டு, திருகோணமலை கடற்படை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply