கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு விழா!-ஏற்காட்டில் நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காடு நண்பர்கள் குழு நடத்திய 5 ஆம் ஆண்டு கபாடி போட்டி 27, 28 ஆகிய தினங்களில் ஏற்காட்டில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டியில் மஞ்சக்குட்டை அணியும், மூர்த்தி பிரதர்ஸ் அணியும் மோதின. இதில் மூர்த்தி பிரதர்ஸ் 24 புள்ளிகளும், மஞ்சக்குட்டை அணி 26 புள்ளிகளும் பெற்றது. 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மஞ்சக்குட்டை அணி வெற்றி பெற்றது.

இரண்டாமிடத்தை மூர்த்தி பிரதர்ஸ் அணியும், மூன்றாம் இடத்தை ஆர்.டி.எஸ். அணியும், நான்காம் இடத்தை இதயநிலா அணியும் பிடித்தன. இன்று மாலை நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்பு விருந்தினர்கள் வெற்றி கோப்பைகள் மற்றும் பரிசு தொகையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அண்ணா துரை, தும்பல் பாஸ்கரன், காவல் உதவி ஆய்வாளர் மைக்கல் ஆண்டனி, முன்னாள் ஆசிரியர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை குணசேகர், பாலு உள்ளிட்ட ஏற்காடு நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

-நவீன் குமார்.

 

Leave a Reply