இலங்கையில் லேசர் பிரிண்டர் மூலம் கள்ள பணம் அச்சிட்ட நபர் கைது!  

இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் நடத்திய விசாரணையின் போது, லேசர் பிரிண்டர் மூலம் கள்ள பணம் அச்சிட்ட ஒரு நபரை  கையும், களவுமாக, இலங்கை கடற்படையினர் (16 ஜனவரி 2018) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், நூறு அமெரிக்க டாலர்கள் மற்றும்  போலி பணம் அச்சிட பயன்படுத்தப்பட்ட ஒரு லேசர் பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கொழும்பு சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

 

Leave a Reply