இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!- 7 கிலோ தங்கம் பறிமுதல்!

இலங்கை காங்கேசன்துறை லைட் ஹவுஸின் வடமேற்கு கடல் பகுதியில் இருந்து, படகு நங்கூரத்தில் மறைத்து, இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இரண்டு நபர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (16 ஜனவரி) கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 7 கிலோ தங்கம் (100 கிராம் எடையுள்ள 70 பிஸ்கட் வடிவில்) பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட 7 கிலோ தங்க பிஸ்கட்டுகளை, இலங்கை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 -என்.வசந்த ராகவன்.

Leave a Reply