பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!

DSC00208DSC00205DSC00221DSC00213DSC00203

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர எல்லைக்குள் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையமானது திருச்சி மன்னார்புரம் மற்றும் வில்லியம்ஸ் சாலையில் சோனா-மீனா சினிமா தியேட்டர் எதிரில், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக பேருந்து நிலையமானது நேற்று மாலை 5 மணியிலிருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு நகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை, விராலிமலை வழியாக மதுரை செல்லும் பேருந்துகள் மன்னார்புரத்திலும், தஞ்சாவூர் வழியே செல்லும் அனைத்து பேருந்துகளும் வில்லியம்ஸ் சாலையிலும் இயக்கப்படுகிறது.

மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

-ரா.ரிச்சி ரோஸ்வா.

-ச.ராஜா.

Leave a Reply