இலங்கையில் கடல் ஆமை வைத்திருந்த ஒருவர் கைது!

SLN SLN1 SLN2

இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சி பல்லிகுடா பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 15 கிலோ எடையுள்ள ஒரு கடல் ஆமை வைத்திருந்த ஒருவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் பூ நகரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடல் ஆமை அரிய கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதை பிடிப்பதோ, விற்பனைச் செய்வதோ, காட்சிப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். 

-என்.வசந்த ராகவன்.

 

 

Leave a Reply