இலங்கையில் வலம்புரி சங்கு விற்க முயன்ற 7 பேர் கைது !

valampuri sangu valampuri sangu1

இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலங்கை வத்தளை பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனை நிகழ்வின் போது, வலம்புரி சங்கு விற்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 750 கிராம் எடையுள்ள 43 செ.மீ. நீளமுள்ள வலம்புரி சங்கு ஒன்றையும், 600 கிராம் எடையுள்ள வலம்புரி சங்கு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வலம்புரி சங்கு அரிய கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதை பிடிப்பதோ, விற்பனைச் செய்வதோ, காட்சிப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply