திருவெறும்பூர் எழில் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரகோரி கண்டன ஆர்பாட்டம்!

S2640022

திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் வட்டம், கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில் நகரில் சுமார் 3000 குடும்பங்கள் உள்ளன. இங்கு நீண்ட காலமாக சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எழில் நகரில் குப்பைகள் சரியாக அகற்றபடாமல் உள்ளதால் சாலை ஓரங்கள் குப்பை காடாக உள்ளது. தெரு விளக்குகள் எரியாமல் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதேபோல் மின் கம்பங்கள் சிதிலடைந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை. 

இந்நிலையில், எழில் நகர் அனைத்து மக்கள் வளர்ச்சி மன்றம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தையும், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரையும் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-ஆர்.சிராசுதீன்.