சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இரண்டு சிறுவர்கள், நான்கு பெண்கள் உட்பட 14 பேர் ஏற்காடு வந்து ஏற்காட்டில் தங்கி, ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இவர்கள் ஏற்காடு மலைப்பாதையின் 40 அடி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, வேன் பிரேக் ஃபெய்லியராகி தடுப்பு சுவறில் மோதி, சுவற்றை தாண்டி கவிழ்ந்து.
இதில் வேன் டிரைவர் ரமேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பித்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் டிரைவர் ரமேஷ் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற சுற்றுலா பயணிகள் வேறு வாகனம் மூலம் திரும்பி சென்றனர்.
-நவீன் குமார்.