ஏற்காட்டில் இரத்த தான முகாம்!  

ye1501P1

ஏற்காடு தாலுக்கா, பிலியூர் கிராமத்தை சேர்ந்த இளந்தென்றல் இளைஞர் நற்பணி மன்றம் ஆரம்பித்து 20-வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா, இன்று அந்த கிராமத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று காலை கிராமத்தின் பொது மந்தையில் கிராம மக்கள் மற்றும் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இணைந்து பொது பொங்கல் வைத்து வழிப்பட்டு கிராம மக்களுக்கு வழங்கினர்.

பின்னர் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்களம் மருத்துவமனையும் இணைந்து இரத்த தான முகாம் ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் இளைஞர்கள் 60-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.    

 -நவீன் குமார்.