பதவியிழந்த மஹிந்த ராஜபக்ச அவரது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த அவரது உடைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் அவசர, அவசரமாக அங்கிருந்து ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் உள்ள மெதமுலன இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுவரை ஜனாதிபதி என்ற முறையில் கொழும்பு அலரி மாளிகை இல்லத்துக்கு அருகில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் சொந்த ஊருக்கு சென்று வந்த மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினர், இன்று தமது காரில் கொழும்பிலிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஜனாதிபதிக்குரிய பாதுகாப்புடன் தற்போது அவர் ஊருக்குப் புறப்பட்டார்.
-எஸ்.சதிஸ்சர்மா.