திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூட்டுறவு துறை பதிவாளராக பணியிட மாற்றம்!

ஜெயஸ்ரீ முரளிதரன்.

ஜெயஸ்ரீ முரளிதரன்.

திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார் நகர் மற்றும் ஊர் அமைப்பு திட்டத் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவு துறை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Dr.K.S.பழனிச்சாமி

Dr.K.S.பழனிச்சாமி

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த Dr.K.S.பழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த N.வெங்கடாச்சலம், தேனி மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

N.வெங்கடாச்சலம்.

N.வெங்கடாச்சலம்.

அதே போல, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த T.N.ஹரிஹரன், திண்டுக்கல் ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாராமன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

T.N.ஹரிஹரன்

T.N.ஹரிஹரன்

முனியசாமி.

முனியசாமி.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த முனியசாமி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக எஸ்.பழனிச்சாமியும் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in