ஏற்காடு, கொம்பு தூக்கி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(45), இவர் கொம்புதூக்கி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தோட்ட வேலை செய்து வருகிறார்.
வழக்கம் போல தனது சக ஊழியர்களுடன் இன்று காலை தனியார் எஸ்டேட் வழியாக பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று வளைவில் அவர்களை கடந்து சென்றுள்ளது. அந்த லாரிக்காக அனைவரும் ஒதுங்கி வழி விட்டுள்ளனர். லட்சுமி, மரம் ஒன்றை ஒட்டி நின்றுள்ளார்.
அவர்களை கடந்து சென்ற லாரி வளையும் போது, பின்பகுதி சறுக்கி லட்சுமியை இடித்து மரத்துடன் சேர்த்து நசுக்கியது. இதனால் லட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடன்டியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் பிரேதத்தை கைப்பற்றி, லாரி டிரைவர் பொண்ணு ராஜ்(32) பிடித்து விசாரித்து வருகிறார்.
இறந்த லட்சுமிக்கு திருமணமான 2 மகள்களும், திருமணமாகாத 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
-நவீன் குமார்.