நரேந்திர மோதி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ!

vaiko_modivaiko_modi meetvaiko_rajnathvaiko_rajnath.jpgmeetநடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், தமிழகத்தில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார்.

இந்நிலையில், பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோதியையும், பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங்கையும், இன்று (19.5.2014) வைகோ நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த வெற்றியிலேயே மகிழ்ச்சியடைய முடியாமல், நான் கவலைப்பட்டது நீங்கள் தோற்றது தான் என்று வைகோவிடம், ராஜ்நாத் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

“உப்பு விற்க போகும் போது மழை பெய்யுது, மாவு விற்க போகும் போது காற்றடிக்குது” என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, வைகோவிற்கு மிகவும் பொருந்தியிருக்கிறது.

அது என்னவோ, சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம், தவறான முடிவெடுப்பதே வைகோவிற்கு வாடிக்கையாகிவிட்டது.

-எஸ்.சதீஸ்சர்மா.