பி.பி.சி. ஊடகச் செய்தியாளர் வெளியேற்றம் : இலங்கை அரசு உத்தரவு

bbc_newscharles_havilandகொழும்பில் உள்ள பி.பி.சி ஊடகத்தின் செய்தியாளர் சார்ள்ஸ் ஹாவிலேண்டுக்கு வீசாவை நீடிக்க இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. அவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்து தமது பணிகளை ஆற்றிவருகிறார்.

அவரது வீசா இந்த மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், தமது வீசாவை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்குமாறு வெளிவிவகார அமைச்சகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சகம், அவரை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.