தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்! எஸ்.ஆர்.கோபியை வைத்து மு.க.அழகிரியை மிரட்ட மு.க.ஸ்டாலின் திட்டம் !

Alagiri DMK

dmk order

தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்க முடிவு செய்துள்ளதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி இன்று (25.03.2014) மதியம் அறிவித்துள்ளார்.

தி.மு.க.விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மு.க.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும், மற்ற கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கட்சியின் மீது அவதூறு கூறி வருகிறாரே? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த மு.கருணாநிதி, மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டதற்குப் பிறகு உரிய விளக்கங்களை அதற்கு அளிக்காமல், மேலும் மேலும் தி.மு.கழகத்தை விமர்சிப்பதாலும், தி.மு.கழகத் தலைவர்களைப் பற்றி அவதூறு கூறிவருவதாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்து பேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவே நீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

mk-stalinஅழகிரியை பா.ஜனதா, காங்கிரஸ், மதிமுக வேட்பாளர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டது நேற்று (24.03.2014) ஊடகங்களில் பரபரப்பாக வெளியான நிலையிலேயே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கட்சி விரோத செயல்பாடு குறித்து ஏற்கனவே அழகிரிக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸுக்கு அவர் இதுவரை பதில் ஏதும் அனுப்பவில்லை. இதனைத் தொடர்ந்தே இதனை காரணம் காட்டி அவரை கட்சியிலிருந்து நீக்கும் அதிரடி முடிவுக்கு கருணாநிதி வந்ததாக தெரிகிறது.

எஸ்.ஆர்.கோபி

எஸ்.ஆர்.கோபி

இந்நிலையில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் எஸ்.ஆர்.கோபி தனது சகோதரர்களுடன் இன்று (25.03.2014) தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியையும், அவரது மகன் மு.க.ஸ்டாலினையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர். மு.க.அழகிரியின் அனைத்து அந்தரங்க விபரங்களையும் அறிந்த எஸ்.ஆர்.கோபியை வைத்து மு.க.அழகிரியை மிரட்ட மு.க.ஸ்டாலினும்,  தி.மு.க. தலைமையும் தயாராகி வருகிறது.