தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை : ரூ.42,185 கோடி நிர்ணயம்!

pr130214a_0pr130214e_0pr130214b_0TNSL0113022014

தமிழ்நாடு சட்டசபையில் இன்று (13.02.2014)  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்   பேசினார். 2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ.42,185 கோடி நிர்ணயக்கப்பட்டுள்ளதாக பன்னீர் செல்வம் கூறினார்.

காவல்துறைக்கு 5186.20 கோடி நிதி ஒதுக்கீடு.

காவல்துறை குடியிருப்புகள், கட்டடங்கள் கட்ட 571.67 கோடி நிதி ஒதுக்கீடு.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையை நவீனப்படுத்த ரூ.189.65 கோடி ஒதுக்கீடு.

சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு மொத்தம் ரூ. 215 கோடி ஒதுக்கீடு.

தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க ரூ.194.66 கோடி நிதி ஒதுக்கீடு.

நீதிமன்ற நிர்வாக மேம்பாட்டுக்கு ரூ.783.02 கோடி ஒதுக்கீடு.

ரூ. 100 கோடி செலவில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் வரிவசூல் செய்ய 10 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்படும்.

சாலைகள் மேம்பாட்டு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ. 2800 கோடி ஒதுக்கீடு.

பேரிடர் சமாளிப்புத் திட்டத்திற்கு ரூ.106.29 கோடி நிதி ஒதுக்கீடு.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடப்பு நிதியாண்டில் ரூ.681 கோடி நிதி ஒதுக்கீடு.

இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ. 499 கோடி ஒதுக்கீடு.

நடப்பு ஆண்டில் ரூ. 1260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.

ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

தமிழ் வளர்ச்சிக்கென ரூபாய் 39.29 கோடி நிதி ஒதுக்கீடு.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

திருத்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும்.

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களின் நிவாரணத்திற்காக வழங்க ரூ.105 கோடி ஒதுக்கீடு.

4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

அணைகள் புனரமைப்புக்கு ரூ. 329.65 கோடி ஒதுக்கீடு.

மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ.119.98 கோடி நிதி ஒதுக்கீடு.

கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

திட்ட செயலாக்கத்தின்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்த்தம் செய்ய ரூ. 2.077 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் ரூ.2000 கோடி கடனை தமிழக அரசே ஏற்கும்.

போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

60 ஆயிரம் சூரிய ஒளி மின்சக்தி தெருவிளக்குகள் அமைக்க ரூ.46.58 கோடி நிதி ஒதுக்கீடு.

இந்திரா வீட்டுவசதி திட்டத்தில் நடப்பாண்டில் 1,6,000 வீடுகள் அமைக்கப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு ரூ.75 கோடியில் பலமாடி கட்டடம் கட்டப்படும்.

வரும் நிதியாண்டில் ரூ.1110 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

உயர்கல்வித் துறைக்கு ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கீடு.

தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை அமைக்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.197.10 கோடியில் 1747 குடியிருப்புகள் கட்டப்படும்.

திருநெல்வேலி மாநகராட்சி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு.

சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு.

கூட்டுறவு அமைப்புகளுக்கு பயிர்க்கடனாக ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்படும்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 323 கோடி ஒதுக்கீடு.

நடப்பு நிதியாண்டில் கோழி வளர்ப்புக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க ரூ. 198.25 கோடி ஒதுக்கீடு.

2014-15-ல் உணவு மானியம் ரூ. 5,300 கோடியாக உயர்த்தப்படும்.

உழவர் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.1,475.42 கோடி நிதி ஒதுக்கீடு.

35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வரும் அக்டோபரில் நடத்தப்படும்.

இதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 2.8 கோடி செலவில் தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரி விடுதிகள் கட்டப்படும்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு.

12,000 பயணாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு.

தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென ரூ.253.92 கோடி நிதி ஒதுக்கீடு.

பயிர்க் காப்பீட்டிற்காக ரூ.242.54 கோடி நிதி ஒதுக்கீடு.

ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கப்படும்.

கே.எப்.டபுள்யூ. என்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத் தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை ரூ.1,593 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நடவடிக்கை.

ஜவஹர்லால்நேரு தேசிய நகந்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

சென்னை பேருந்துப் போக்குவரத்தின் திறனை உயர்த்த, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு முறை செயல்படுத்தப்படும்.

அடிப்படைத் தேவைகள் திட்டத்திற்காக 186.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதிக்காக ரூ.3,734 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மைக்காக, ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பங்கீட்டிற்காக 5,168.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி அளித்திட, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் நிறுவப்படும்.

திருமண உதவித் திட்டங்களுக்காக 751.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், 547.09 கோடி ரூபாய் பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியப் பலன்களுக்காக 16,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் இடங்களில், 17.50 கோடி ரூபாய் செலவில் பணிபுரியும் பெண்கள் தங்கும் 14 விடுதிகள் புதிதாக அமைக்கப்படும்.