News தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய கட்டிடம் மற்றும் புறநோயாளி பிரிவை மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார்.
News கடல் நீரை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் உப்பு நீர் எல்.இ.டி. விளக்கை சென்னையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.
News காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் சார்பில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 16 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது கேலோ மகளிர் ஹாக்கிப் போட்டிகள் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளன.
News வீர் கதா போட்டியில் வென்ற 25 பேருக்கு புதுதில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு.
News இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ், மாவட்டந்தோறும் பேரணிகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
News ஆசியாவிலேயே இந்தியாவில் தான் 60% யானைகள் வசிப்பதாகவும், அவற்றை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.