அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னையும் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகனும், சர்வதேசத் தரகர் சுப்ரமணியன் சுவாமியும், தொடர்ந்து மனு மேல் மனு போட்டு வந்ததார்கள். இதற்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முற்று புள்ளி வைத்து விட்டார்.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3-வது நபராக சேர்க்கக்கோரி தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன், சர்வதேசத் தரகர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in
