தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு அ.இ.அதி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு ஜெ.ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-ஆர்.அருண்கேசவன்.
