மேற்கு வங்கத்தில் சுகாதார திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆய்வு.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரியுடன் நடைபெற்ற மெய்நிகர் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது, முக்கிய சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பிற முன்னணி திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளை பயனுள்ளதாக பயன்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

சுகாதார அடிக்கட்டமைப்பை மேம்படுத்துதல், தடுப்பூசி இயக்கங்களை வலுப்படுத்துதல், தாய் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள், காசநோய் மற்றும் பிற கொசு வழி பரவும் நோய்களை ஒழித்தல், தொற்றற்ற நோய்கள் குறித்த ஆரம்ப கட்ட பரிசோதனை மற்றும் கண்டறிதல், மேலும் அனைத்து அரசு சுகாதார நிலையங்களிலும் மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எவ்வாறு அடையலாம் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

நிதிகளை காலவரையறைக்குள் பயன்படுத்துதல், சுகாதார சேவை வழங்கும் அமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல், திட்டங்களின் கண்காணிப்பை மேம்படுத்துதல் மற்றும் மாநிலம் முழுவதும் தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், 2026–27 நிதியாண்டிற்காக ரூ. 3505.59 கோடி மதிப்பிலான மொத்த நிதி ஒதுக்கீடு மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக ரூ. 527.58 கோடி இன்று மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டது.

Leave a Reply