கிளாஸ்கோ காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவருடைய வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடையச் செய்வதாகவும் பெருமிதம் கொள்ளச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள திரு மோடி, அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
“பளுதூக்கும் பிரிவில் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம்!
கிளாஸ்கோ காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்துகள். அவருடைய வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடையச் செய்து பெருமிதம் கொள்ள வைக்கிறது. அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துகள்”
எஸ்.சதிஸ் சர்மா
