சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.

திவாஹர்

Leave a Reply