திருச்சியில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆய்வு!-விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை.

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் இன்று (ஜூன் 26) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை, சட்டத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளில் ரூ.25.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனும் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply