இரண்டு ஆண்டுகளாக சேகரித்து வந்த உண்டியல் பணத்தை ‘கொரோனா’ நிதியாக அளித்த ஐந்து வயது சிறுமி!

அரியலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்த ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் மணிகண்ணன் என்பவரின் மகள் சிவகாமி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தாம் இரண்டு ஆண்டுகளாக சேகரித்து வந்த உண்டியல் பணத்தை கொரோனா நிதியாக அளிக்க விரும்புவதாக தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து 08.06.2020-ம் அன்று தனது தந்தையுடன் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசனை நேரில் சந்தித்து தனது சேமிப்பு தொகையான ரூபாய் 3910/- யை கொரோனா நிதிக்காக அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன், இந்த சிறு வயதில் சேவை மனப்பான்மையுடன் நிதி அளித்த சிறுமியை வாழ்த்தி பாராட்டினார்.

-துரைதிரவியம்.

Leave a Reply