திருச்சி, நவல்பட்டு அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி!

திருச்சி, நவல்ப்பட்டு அருகே உள்ள பூலங்குடி காலனி, பாரதிநகர் ,கதவு எண் 8, வடக்குத்தெரு என்ற முகவரியில் உள்ள வீட்டில், இன்று இரவு சமையல் கேஸ் வெடித்ததில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜெயக்கோரி வயது 60, விஜயலட்சுமி வயது 32, விஜய வாணி வயது 29, விஜயகுமார் வயது 28, ஆகிய நான்கு பேர் பலியானார்கள்.

இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகள் சேதமடைந்துள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் காலில் காயமடைந்து, திருச்சி, நவல்ப்பட்டு அருகே உள்ள பூலங்குடி காலனி, பாரதிநகரில் வசித்து வந்த விஜயகுமார் வயது 28 என்பவர், உடல் நிலை குறைவால் இன்று திடீரென உயிர் இழந்ததையடுத்து, அந்த துக்கம் தாளாமல் அந்த குடும்ப உறுப்பினர்கள் சமையல் கேஸ் சிலிண்டரை கசியவிட்டு வெடிக்க செய்து மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர் என்பது, போலிசார் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply