மின் கம்பத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது!

சங்ககிரி, கலந்திரி கிராமத்தை சேர்ந்த ராஜாகவுண்டர் மகன் ராஜசேகர் (வயது50), ஏற்காட்டில் இவரது நண்பர் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க நேற்று மாலை தனது (மாருதி ஜென்) காரில் ஏற்காடு வந்துள்ளார்.

தனது நண்பர் வீட்டிற்கு செல்லும் போது, கொம்மக்காடு அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது. மின் கம்பமும் சாய்ந்தது. தலையில் காயம் ஏற்பட்டு காரில் சிக்கியிருந்த ராஜசேகரை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராஜசேகர் மது போதையில் கார் ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 – நவீன் குமார்.

 

 

Leave a Reply