காவிரியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த, தமிழக எம்.பி.க்கள்!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

tn.all party meet

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட தீர்மானித்து இருக்கிறது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் பங்கை ஏற்கனவே கர்நாடகம் முறைப்படி வழங்க மறுத்து வரும் நிலையில், மேலும், 2 அணைகளை கட்டினால், தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும்.

இதனால் கர்நாடகம் புதிதாக 2 அணைகள் கட்டுவதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. விவசாயிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

அத்துடன், கர்நாடகம் அணைகள் கட்ட அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் 27.03.2015 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து இந்த தீர்மானத்தை அவரிடம் வழங்குவார்கள் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் நேற்று முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தபடி, பாராளுமன்ற இரு சபைகளையும் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் 54 பேர் இவர்களில் 48 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். தி.மு.க.வை சேர்ந்த 4 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி, ராதாகிருஷ்ணன் ஆகியோர், நேற்று டெல்லியில் பாராளுமன்ற சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான மு.தம்பிதுரை தலைமையில் குழுவாக சென்று, பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்கள்.

அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 55 எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான அம்பேத் ராஜனும், தமிழக எம்.பி.க்கள் குழுவினருடன் சென்று இருந்தார். இவர் தமிழர் ஆவர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறவில்லை.

எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் நரேந்திர மோதியுடன் 25 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும், தமிழக சட்டசபையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டியும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் நடவடிக்கையை தடுப்பது குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்கி கூறினார்கள். அந்த தீர்மானத்தையும் அவரிடம் வழங்கினார்கள்.

அப்போது ஒவ்வொரு கட்சியின் சார்பில் ஒருவரை பேசுமாறு பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக்கொண்டார். அதன்படி மு.தம்பிதுரை (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) உள்ளிட்டோர் பேசினார்கள்.

கர்நாடகம் அணைகள் கட்டும் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில முதல்–மந்திரிகளையும் அழைத்து பேசுமாறு அப்போது பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக எம்.பி.க்கள் கூறியதை கேட்டு அறிந்த பிரதமர் நரேந்திர மோதி, சம்பந்தப்பட்ட துறையிடம் தற்போதைய நிலை குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஏற்கனவே அறிவுறுத்தி இருப்பதாகவும் மற்றும் இதுகுறித்து மேலும் பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.