இலங்கை யுத்தத்தில் தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு  இந்தியாவில் உயரிய விருது!

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? C.T.C.  IN RAJASTHAN.jpg1????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????sarath sarath.jpg1சரத் பொன்சேகா

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாடு நடைப்பெற்று வருகிறது. இந்த பாதுகாப்பு மாநாட்டில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு சம்பந்தமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

International-counter-terrorism-conference

இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில், நடத்தப்படும் இந்த மாநாட்டை இந்திய சர்தார் பட்டேல் போலீஸ் பல்கலைக்கழகம், ஜெய்பூர் பாதுகாப்பு மற்றும் இந்திய குற்றவியல் பிரிவு ஆகியவை ஒழுங்கு செய்துள்ளன.

இதில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேப்டன் சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இதனை வழங்கியுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடுகளின் அனுபவங்கள் என்பன இந்த மாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும்.

இந்தியாவில் நடந்த செப்டம்பர் 26 தாக்குதல், நாட்டு எல்லையில் நடக்கும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத ஒழிப்பு தந்திர யுக்திகள், முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களின் பயங்கரவாத செயல்கள், கடல் வழி பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகிப்பது,

போதைப் பொருள் மற்றும் போலி நாணயங்கள் அச்சிடுவது போன்ற பயங்கரவாதிகளின் வருமான வழிகள் மாத்திரமல்லாது விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளை தோற்கடித்தது தொடர்பான அனுபவங்கள் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பரிகர், இந்திய வெளிவிவகார இணையமைச்சர் வீ.கே. சிங், அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கிரீஸ், சேர்பியா, இத்தாலி, இஸ்ரேல், நேபாளம், ரஷ்யா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளை அடக்கியதில் இலங்கை பெற்ற அனுபவம், வெற்றியை பெற்ற விதம் குறித்து சரத் பொன்சேகா மாநாட்டில் விளக்கியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள்புலிகளை தோற்கடிக்க இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கையாண்ட தந்திரயுக்திகள், வன்னி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்தும் சரத் பொன்சேகா மாநாட்டில் தெளிவுப் படுத்தியுள்ளார்.

-எஸ்.சதீஸ் சர்மா.