இலங்கை கடற்படையினருக்கு ரோந்துக் கப்பல் : அவுஸ்திரேலிய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியது!

sl3 sl.navy sl.navy.jpg2

இலங்கை கடற்படையினருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரோந்துக் கப்பல் இன்று (24.04.2014) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதனை கடற்படைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளும் அவுஸ்ரேலிய தூதுவரும் வரவேற்றனர். இதையடுத்து, இந்த ரோந்துப்படகை முறைப்படி இலங்கைக் கடற்படையிடம் அவுஸ்ரேலியத் தூதுவர் ஒப்படைத்தார். ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக இரண்டு ரோந்துப் படகுகளை இலங்கைக் கடற்படைக்கு அவுஸ்ரேலியா வழங்குவது குறிப்பிடத்தக்கது.